யாழில் விபத்து, ஒருவர் பலி

196 0

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் கொடிகாமம் இராமாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வேனொன்றும் இரு சக்கர உழவு இயந்திரமும் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த சரசாலையைச் சேர்ந்த மு.சிவசங்கர் என்பவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சரசாலையை சேர்ந்த 55 வயதுடைய க. விக்னேஸ்வரன் என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

விபத்தையேற்படுத்திய வேனின் சாரதி விசாரணைக்காக பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment