புதையல் தோண்டிய பெண் உட்பட அறுவர் கைது

232 0

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் நீராவி பகுதியில் புதையல் தோண்ட முற்றபட்ட ஒரு பெண் உட்பட அறுவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் உட்பட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டன.

கைது செய்யபட்டவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment