மந்திரவாதி கொலை வழக்கில் பெண் கைது!

391 0

சென்னை திருவல்லிக்கேணியில் மந்திரவாதி உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் செய்யது பஸ்ருதீன் (வயது 63) என்ற மந்திரவாதி உயிரோடு எரித்து படுகொலை செய்யப்பட்டார். பர்தா அணிந்த பெண் ஒருவர் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் விசாரணை மேற்கொண்டார்.

சென்னை ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த நபீன்தாஜ் (40) என்ற பெண்ணுக்கு, இந்த கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நபீன்தாஜ் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்று அவர் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். உடனடியாக அவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், தனது குடும்ப பிரச்சினையை தீர்ப்பதாக கூறி மந்திரவாதி செய்யது பஸ்ருதீன் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கியதாகவும், ஆனால் குடும்ப பிரச்சினை எதையும் தீர்க்கவில்லை என்றும், எனவே கோபம்கொண்டு மந்திரவாதியை தீர்த்து கட்டியதாகவும் நபீன்தாஜ் தெரிவித்து உள்ளார். அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a comment