தமிழக மீனவர்கள் 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

185 0

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 8 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜீலை மாதம் 16 ஆம் திகதி இராமேஸ்வரம் நடராஜபுரத்தில் இருந்து மிதவையில் மீன்பிடிக்க சென்று காற்றின் வேகம் காரணமாக  இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி சென்ற இரண்டு மீனவர்களும், கடந்த 22 ஆம் திகதி புதுக்கோட்டையில் இருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை  கடற்படை ரோந்து கப்பலில் மோதி படகு கவிழ்ந்த ஆறு புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் என மொத்தம் எட்டு மீனவர்களின் வழக்கு இன்று மல்லாக்கம் நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா மீனவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து  மீனவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a comment