கொழும்பில் இருவர் கைது

312 0
கொழும்பு ஆமர்வீதியில் சட்டவிரோத போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கிலோகிராம் அசிஸ் போதை பொருள், மற்றும் 13 கிலோகிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட போதே குறித்த போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் கொட்டா ஞ்சேனை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலை படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment