மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

269 0

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் சிலருக்கு இடையில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலின் காரணமாக மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மின்னேரியா குளத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த மோதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த மோதலில் காயமடைந்த வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வர் ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment