வடக்கில் இராணுவ சின்னங்கள் அகற்றப்பட மாட்டாது- ருவன் விஜேவர்தன

239 0

வடக்கில் இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றப்போவதில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள சில கடும் போக்குவாதிகளின் செயற்பாடுகளே இது எனவும் இவ்வாறான கடும் போக்குடைய செயற்பாடுகளால் மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்க முற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment