சிகாகோவில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

249 0

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் புறநகர் பகுதியான லிட்டில் வில்லேஜ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  இன்று அதிகாலை திடீரென தீ பற்றியது. இதில் இரண்டு வீடுகளில் மளமளவென தீப்பற்றி எரிந்தது.
இந்த தீ விபத்தில் சிக்கி 6 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment