சிறுவன் கங்கையில் மூழ்கி பலி

215 0
திஸ்ஸமஹாராம, யோத கங்கையில் நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தியதலாவ, அலுத்கம்மானய பிரதேசத்தில் இருந்து கதிர்காமத்திற்கு சென்ற குழுவினருடன் இருந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீராடும் வேளை யோத கங்கையில் நீரில் மூழ்கிய சிறுவனை பிரதேச மக்கள் காப்பாற்றிய நிலையில் கவலைக்கிடமான நிலையில் சிறுவன் தெபரவேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.

இந்த மரணம் குறித்து திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a comment