மோட்டார் சைக்கிளில் மோதி சிறுவன் பலி

222 0

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கடலூர் பிரதேசத்தல் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா மதினா நகரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உயிரிழந்தாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுவன் மட்டக்களப்பு, திருகோணமலை வீதியை கடக்க முற்பட்ட போது, மூதூர் பிரதேசத்தில் இருந்த வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 23 வயதுடைய இளைஞனை தாம் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment