சிவகுமாரன், அமிர்தலிங்கம் ஆகியோரின் பிறந்ததின நிகழ்வுகள் அனுஸ்டிப்பு

219 0

தியாகி பொன் சிவகுமாரன் மற்றும் அரசியல்; தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோரின் ஜனன தின நிகழ்வுகள் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட கிளையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அனுஸ்டிக்கப்பட்டது

உரும்பிராயில் தியாகி பொன் சிவகுமாரின் 68 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு உரும்பிராயில் அவரது சிலை அமைந்துள்ள இடத்தில் ஒன்றுகூடிய ரெலோவின் பொதுச் செயலாளர் என்.சிறிகாந்தா, மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்ணம், குகதாஸ், வலிகிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் பொன் சிவகுமாரனின் குடும்ப உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள்,  சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,

பொது மக்கள் மண்ணுக்காக உயிர்நீர்த்த மறவர்களுக்காக அகவணக்கம் செலுத்தியதுடன் தியாகி சிவகுமாரனின் உருவச்சிலைக்கு மலர்மாலைகளை அணிவித்ததுடன் மலர் வணக்கம் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழர் அரசியல் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது 91 ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவரது வலி மேற்கு பிரதேச சபை முன்றலில் உள்ள திருவுருவச்சிலைக்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்விலும் பெருந்தெகையினர் பங்கேற்று உணர்வுபூர்வமாக மதிப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment