மொரட்டுவ, லுனாவ பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது

210 0
மொரட்டுவ, லுனாவ பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட அச்சகம் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.
நேற்று (25) பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையின் போது, 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 15 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மடிக்கணினி, ஒரு ஸ்கேனர், ஒரு அச்சுப்பொறி, ஒரு தட்டச்சு பொறி மற்றும் சில போலி முத்திரைகள் சிலவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 33, 37, 39 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் லுனாவ, கோரலவெல்ல, எகோடஉயன மற்றும் அங்குலான பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment