சம்பள முரண்பாட்டு ஆணைக்குழுவின் முதல் கூட்டம் நாளை

308 0

அரச சேவை ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இனங்கண்டு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்ட சம்பள முரண்பாட்டு ஆணைக்குழு நாளை (27) முதல் தடவையாக கூடுகின்றது.

இருப்பினும், இந்த ஆணைக்குழு தொடர்பில் அரச ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் சார்பான கருத்தைக் கொள்ளாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவொன்று ஏற்கனவே உள்ள நிலையில், அரசாங்கம் ஏன் புதிதாக பிரத்தியே ஆணைக்குழுவொன்றை அமைத்தது என்பது குறித்து சந்தேகமாகவே உள்ளதாக இலங்கை ஆசிரியர்  சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment