உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துங்கள்-தேசப்பிரிய

186 0

தேர்தல்கள் உரிய காலத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யவேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனநாயக அரசாங்கம் என்பது மக்களின் கருத்துக்கள் அவர்களது அபிலாசைகளை அடிப்படையாக கொண்டதாக காணப்படவேண்டும்.

இதன்காரணமாக தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெறுவதை உறுதிசெய்யவேண்டும்.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை பிரகடனம் ஜனநாயக நாடொன்றில் ஆட்சியில் உள்ள சக்தியின் அடித்தளமாக மக்களின் தெரிவுகள்  காணப்படவேண்டும் என தெரிவிக்கின்றது.

மேலும் இந்த தெரிவினை காலத்திற்கு காலம் இடம்பெறும் நீதியான தேர்தல்கள் மூலம் உறுதிசெய்யவேண்டும் எனவும் ஐநாவின் மனித உரிமை பிரகடனம் தெரிவிக்கின்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் அடிப்படை கொள்கையாக இதுவே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment