தையிட்டியில் 20 பரப்பில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் நேற்று நடப்பட்டது. விகாரை அமைப்பதற்காக ஆவணங்கள் வலி.வடக்கு பிரதேச சபையிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை அனுமதி வழங்காத நிலையிலும் விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது.
தையிட்டியில் போருக்கு முன்னர், பிக்குகளுக்குச் சொந்தமான காணி இருந்தது. போர் நடவடிக்கைகளால் அந்தக் காணியிலிருந்து அவர்கள் வெளியேறியிருந்தார்கள்.