அர­சாங்கம் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை. அது தொடர்பில் மக்கள் மத்­தியில் பல விமர்­ச­னங்கள் இருக்­கின்­றன. நாங்கள் இனியும் பொறு­மை­யுடன் இருக்க முடி­யாது என்று யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்த பிரித்­தா­னிய உயர்ஸ்தானி­க­ரா­லய அர­சியல் தலைமை  அதி­காரி  நீல் கவா­னாக்­கிடம் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனா­தி­ராசா  தெரி­வித்­துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் பிரித்­தா­னிய தூத­ரக அதி­காரி என்­னிடம் கேட்­ட­போது மாகாண சபைத் தேர்தல் ஆனாது இடம்­பெ­ற­வேண்டும். ஆனால் மாகாண சபைத் தேர்­த­லுக்­கான தேர்தல் முறைமை எவ்­வாறு இருக்­க­வேண்டும் என்­பதில் சரி­யான தீர்வு இன்னும் எட்­டப்­ப­ட­வில்லை.

எதிர்­வரும் 24 ஆம் திக­தியே அதற்­கான தீர்வு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆனால் புதிய தேர்தல் முறையில் தேர்தல் நடை­பெறும் என்­பது சாத்­தி­ய­மற்ற விட­ய­மாகும். குறிப்­பாக மாகாண சபை எல்லை முறை­மைகள் தொடர்பில்  சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு பாத­க­மான நிலையே காணப்­ப­டு­கின்­றது.  எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கையை சிறு­பான்மை கட்­சிகள் எதிர்த்­துள்­ளன.

சிறு­பான்மைத் தமிழ்க் கட்­சிகள், முஸ்லிம் கட்­சிகள், மலை­யகத் தமிழ்க் கட்­சிகள் எதி­ரா­கவே இருக்­கின்­றன. இது மட்­டு­மன்றி ஐக்­கிய தேசியக் கட்சி , சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி போன்­ற­வையும் இதற்கு எதி­ரான நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளன இது எவ்­வாறு இருப்­பினும் பழைய முறை­மையின் படி நடக்­கவே விருப்பம் கொண்­டுள்­ளன என்று எடுத்­துக்­கூ­றினேன்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தேர்தல் நேரங்­களில் மக்­க­ளுக்குக் கொடுத்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளதா? மக்கள் மத்­தியில் அது எவ்­வாறு உள்­ளது என்­பது தொடர்பில் அவர் கேட்­ட­போது.

ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் சரி பாரா­ளு­மன்ற தேர்­தலும் சரி வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் எவையும் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. குறிப்­பாக அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்பில் பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அந்த அர­சியல் தீர்வு முழு­மை­யாக எவ்­வாறு வரும் என்­பது தொடர்பில் தெளி­வான முடிவு என்னும் கிடைக்­க­வில்லை. ஆனால் அதி­கா­ரங்­களைப் பகிர்­கின்ற விட­யத்தில் பர­வ­லான இணக்கம் காணப்­ப­டு­கின்­றது. இடைக்­கால அறிக்­கையை முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ பக்­சவும் சிங்­களத் தீவி­ர­வாத அமைப்­பி­னரும் எதிர்க்­கின்­றனர். இந்த அர­சியல் அமைப்பு நாட்டைப் பிளவு படுத்­தப்­போ­வ­தாக கூறி வரு­கின்­றார்கள். அதே­போன்று எங்கள் பக்­கத்­தி­லுள்ள ஒரு சிலரும் அதனை நிரா­க­ரிக்­கின்ற கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். ஆனால் அதி­கா­ரங்­களை பகி­ரக்­கூ­டிய ஒரு இணக்­கப்­பாடு இன்­று­வ­ரைக்கும் இருந்து வரு­கின்­றது.

குறிப்­பாக இலங்­கையில் உள்ள ஏழு முத­ல­மைச்­சர்கள் அதி­காரப் பர­வ­லாக்­கப்­ப­ட­வேண்டும் என்ற ஒரு இணக்­கத்­துக்கு வந்­துள்ள நிலையில் பாரா­ளு­மன்றம் அர­சியல் அமைப்புக் குழு­வாக மாற்­றப்­பட்டு இதற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லையில் இந்த அர­சியல் அமைப்பை ஒரு குறிப்­பிட்­ட­கால எல்­லைக்குள் வெளி­யி­டப்­ப­ட­வேண்டும். இதற்­கான சூழல் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. தீர்வு வரும் என நாங்கள் தொடர்ந்தும் பேசிக்­கொண்­டி­ருப்­ப­தை­விட அர­சியல் அமைப்­பிற்­கான வழி­ந­டத்தல் குழு இணக்கம் காணப்­பட்ட விட­யங்­களை வெளி­யி­டு­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. நாங்கள் இனியும் பொறுத்துக் கொண்­டி­ருப்­பது நன்­றல்ல. சர்­வ­தேச சமூகம் இதற்­கான முயற்­சி­க­ளுக்கு அழுத்­தங்­களை கொடுக்­க­வேண்டும். இவ்­வா­றாக சிறந்த அர­சியல் அமைப்­பினை நாங்கள் உரு­வாக்­க­மு­டி­யாது விட்டால் நாங்­களும் சர்­வ­தேச சமூ­கமும் இதற்­கான மாற்று வழி­களை  தீர்­மா­னிக்­க­வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்றோம் என்று சுட்­டிக்­காட்­டினேன்.

இதே­வேளை வடக்கு மாகாண சபை தொடர்பில் கேட்­ட­போது, வடக்கு மாகாண சபை உரு­வாக்­கப்­பட்டு ஐந்து ஆண்­டுகள் ஆகின்­றன. எனினும் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் கூறப்­பட்ட பல விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. கூட்­ட­மைப்பு மாகாண சபையில் ஆளுங்­கட்­சி­யாக உள்­ள­போதும் அது செய­லற்­ற­தா­கத்தான் காணப்­ப­டு­கின்­றது. தீர்­மா­னங்கள் நிறை­வேற்­று­வ­தா­கவே  இருக்­கின்­றது. மக்­க­ளுக்­கான சேவை­யினை செய்­ய­வில்லை. அர­சியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு அடிப்­ப­டைத்­தே­வை­களை அடை­யாளம் காணுதல், வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குதல், வாழ்­வா­தார உதவித் திட்­டங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­துதல் போன்ற விட­யங்­களில் மாகாண சபை முறை­யாக செயற்­ப­ட­வில்லை.

அதே­போன்று தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பும் மக்­க­ளுக்கு கொடுத்து வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை. ஆனால் எதை­யுமே நிறை­வேற்ற வில்லை என்று கூற­மு­டி­யாது. எம்மை விமர்­சிப்­ப­வர்­களும் மாற்று வழி என்ன என்­பதை தெளி­வாகக் குறிப்­பி­டா­த­வர்­க­ளாக  உள்­ளார்கள். மக்­க­ளுக்கு எங்­கள்­மீது விமர்­ச­னங்­களே இருக்­கின்­றவே தவிர எம்­மீது நம்­பிக்கை இழந்­துள்­ள­தாகக் குறிப்­பி­ட­மாட்டோம். மாகாண சபை­யினால் எதிர்­பார்­கக்ப்­பட்ட விட­யங்கள் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது அனை­வ­ருக்கும் தெரியும் என்று எடுத்­துக்­கூ­றினேன்.

அடுத்த மாகாண சபை தொடர்பில் கேட்­ட­போது, அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கும் அழிந்த தேசத்­தினைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும். மக்­களின் தேவை­களை நிறை­வேற்­று­வ­தற்கும் போட்­டி­யி­டுவோம்.  மக்கள் மத்­தியில் விமர்­ச­னங்கள் இருந்­தாலும் ஒரு சில விட­யங்கள் நடை­பெற்­றுள்­ளன. குறிப்­பாக நில விடு­விப்­புக்கள் வீட்டுத் திட்­டங்கள் போன்­றவை இடம்­பெற்று வரு­கின்­றன. ஆனால் அர­சாங்கம் எங்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நிறை­வேற்­ற­வில்லை இதன்காரணமாகவும் மக்கள் மத்தியில் விமர்சனங்கள் இருக்கின்றன என்று சுட்டிக்காட்டினேன்.

மேலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்களின் முயற்சிகள் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் கேட்டபோது,

புலம்பெயர்ந்து வாழும் மக்களும் முதலீடுகளைச் செய்வதற்கு ஆர்வமாகவுள்ளனர். அதற்கு அரசாங்கமும் சர்வதேச சமூகமும்  வாய்ப்புக்களை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தவேண்டும்.  பிரித்தானியாவும் எமக்கான உதவிகளை செய்யவேண்டும். மேலும் ஜெனீவா மனித உரிமைகள் தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு  சர்வதேச நாடுகள்  தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து அதனைநடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் நான் எடுத்துக் கூறினேன் என்றார்.

யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த பிரித்­தா­னிய உயர் ஸ்தானி­க­ரா­ல­யத்தின்  அர­சியல் தலைமை அதி­காரி  நீல் கவானாக் மாவை சேனா­தி­ராஜா எம்.பி.யைச் சந்­தித்து யாழ்.திரு­நெல்­வே­லி­யி­லுள்ள விடு­தியில் தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள், மாகாண சபைத் தேர்தல், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கும் மக்­க­ளுக்கும் இடை­யி­லான தொடர்­புகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டியமை குறிப்பிடத்தக்கது.