ஆணின் சடலம் மீட்பு

206 0

யக்கல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

யக்கல -றாபல்வத்தை  பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கைகளும் கால்களும் கட்டப்பட்;ட நிலையில்  சடலம் ஒன்று காணப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய  நேற்று மாலை  பொலிஸாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது

குறித்த சடலம் றாபல்வத்தை – யக்கல பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய விதான கமகே சனிதாச என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைகள்  றாகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .மேலும் குறித்த சம்பவம் தொடரபில். மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறி்ப்பிடத்தக்கது.

Leave a comment