ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் நன்னீர் மீன் உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம்

205 0

கலேவல தம்புள்ளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் நன்னீர் மீன் உற்பத்தியை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்றிட்டத்திற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

நன்னீர் மீன்குஞ்சு உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நன்னீர் மீன்வளர்ப்பில் ஈடுபட விரும்புவோருக்கு தலா 50 ஆயிரம் ரூபா வீதம் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தம்புள்ளை பிரதேச செயலாளர் எம்.யூ.நிஷாந்த தெரிவித்துள்ளார்

Leave a comment