விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவியவர் வாஜ்பாய்!

243 0

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடனான தனது நட்பு குறித்த நினைவலைகளை பகிந்து கொண்டார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக சிறிலங்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்ற சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

அதைத்தொடர்ந்து, வாஜ்பாய் குறித்த நினைவலைகளை பகிர்ந்துகொண்ட ரணில், சிறிலங்காவின் உண்மையான நண்பராக இருந்த வாஜ்பாய், இந்தியாவை ஆண்ட சிறந்த பிரதமர்களில் ஒருவர் என தெரிவித்தார்.

மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

சிறிலங்காவின் பிரதமராக நான் இருந்த சமயம் விடுதலை புலிகள் மிகவும் பலம் பொருந்தியவர்களாக இருந்தனர். அப்போது, சிறிலங்காவின் பொருளாதரம் மிகவும் பலவீனமாக இருந்தது.

எனினும், சிறிலங்காவின் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி மீட்டெடுக்கவும், நீட்டிக்கப்பட்ட ராணுவ பயிற்சி அளிக்கவும் வாஜ்பாய் மிகவும் உதவிகரமாக இருந்தார். விடுதலை புலிகளின் கடற்புலிகளை சிறிலங்கா ராணுவத்தால் கட்டுப்படுத்த முடிந்தற்கு வாஜ்பாய் செய்த உதவிகள் தான் முக்கிய காரணம்.

கடந்த 1977-ம் ஆண்டில் வாஜ்பாய் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக இருந்த நேரம் நானும் சிறிலங்கா வெளியுறவுத் துறை மந்திரியாக பதவி வகித்தேன்.

அப்போது அவருடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது, பிறகு வாஜ்பாய் பிரதமர் ஆனதும் அவரது தனிப்பட்ட செல்போன் நம்பரை எனக்கு அளித்ததால் அவருடனான எனது நட்பு தொடர்ந்து நீடித்தது.

இவ்வாறு அவர் மறைந்த வாஜ்பாய் குறித்த நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.

Leave a comment