முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கோம்பாவில் பகுதியில் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 8 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பெண்ணின் மகன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
78 வயதுடைய பெண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிணற்றில் நீர் எடுப்பதற்காக சென்ற ஒருவர் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாரிடம் அறிவித்ததை அடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.