கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலடியில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
கொள்ளைக் கும்பலின் தாக்குதலால் காயங்களுக்குள்ளான வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“ஊரெழு அம்மன் கோவிலடியில் 77 வயதுடைய வயோதிபரும் 70 வயதுடைய அவரது துணைவியாரும் வசித்து வருகின்றனர்.
அவர்களின் வீட்டுக்குள் இன்று அதிகாலை 4 மணிக்கு 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று நுழைந்துள்ளது.
கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்த 6 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுத் தம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
கொள்ளையர்களின் தாக்குதலால் காயடைந்த வயோதிபத் தம்பதியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.