சிறைச்சாலை அமைப்பதற்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்குத்தாக்கல் செய்ய முடிவு(காணொளி)

371 0

யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையை அகற்றுவதற்கு, யாழ். மாநகர சபை வழக்குத்தாக்கல் செய்ய வேண்டும் என, தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று, யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில், இணைத்தலைவர் தலைமையில் இடம்பெற்ற, பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது.

சிறைச்சாலைக்கென ஒதுக்கப்பட்ட காணி, கோப்பாய் இராசா வீதியில், 70 ஏக்கர் இருக்கின்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட சிறைச்சாலையை கோப்பாய்க்கு மாற்றுவதற்கு, பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கு எதிராக யாழ் மாநகர சபை வழக்குத்தாக்கல் செய்யப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை அமைப்பதற்கு, நகர அபிவிருத்தி சபை மற்றும் மாநகர சபை ஆகியவற்றின் அனுமதி பெறப்படவில்லை என்றும், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறைச்சாலையில் மேற்கொள்ளப்படும் கட்டிட அபிவிருத்தி வேலைகள் நிறுத்தப்பட்டு, கோப்பாயில் உள்ள சொந்தக் காணிக்கு மாற்றுவதற்குஇ பிரதம மந்திரியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment