கூட்டு எதிரணி இன்று அழிவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது-காரியவசம்

213 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தாததன் காரணமாக கூட்டு எதிரணி இன்று அழிவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளது என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் காணப்படும் பிரதான பிரச்சினைகளை நாம் துரித கதியில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

அத்துடன் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தாததன் காரணமாக கூட்டு எதிரணி இன்று அழிவை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Leave a comment