தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு

221 0

பொகவந்தலாவ பெற்றௌசோ டெவன்போல் தோட்டப் பகுயில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று சனிகிழமை விடியற்காலை 2.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது

இவ்வாறு சடலமாக மீட்கபட்ட பெண் 30 வயதுடைய சிவலிங்கம் நிர்மாலா எனும் இரு பிள்ளைகளின் தாய்யென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

குறித்த பெண்ணின் மூத்த மகளிடமிருந்து பொலிஸார் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளனர்.

நித்திரையில் இருந்த தாயை கானவில்லையென முதல் மகள் எழுந்து தேடி பார்க்கும் பொழுது அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு மகள் கூச்சலிட்டதை கேட்ட அயல்விட்டார் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தாக தெரிவிக்கபடுகிறது

இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் பலாங்கொடை பகுதியில் தொழில் புரிகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அவசர மரண விசாரனையாளர் திருமதி லக்ஷ்மி தலைமையில் மரணவிசாரனைகள் இடம் பெற்று சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரீசோதனைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு பிரதே பரீசோதனை நிறைவடைந்த பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கபடவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

Leave a comment