மஹிந்த, கோத்தா இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் – பொன்சேகா

360 0

sarath-fonsekaபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்த பாயவும் இராணுவத்தினரைப் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனவே இராணுவத்தினர் தொடர்பில் கருத்துக்கள் தெரிவிப்பதை இவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களைப் பற்றி பேசுவதற்கு உரிமையற்றவர்களே மஹிந்தவும், கோத்தாவும் என்று பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினருக்காக முன்னெடுக்கப்பட்ட ‘நமக்காக நாம்’ என்ற நிதியத்தின் மூலம் 6 இலட்சத்தக்கு அதிகமான பணத்தை கொள்ளையிட்ட அவர்கள் இன்று இராணுவத்தினரின் நலனுக்காக செயற்பட்டவர்கள் போல் தம்மை இனங்காட்டிக் கொள்வதாகவும் அமைச்சர் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொலைக் குற்றச்சாட்டுக்காக 6 இராணுவத்தினருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள மைக்கு கோத்தாவும், மஹிந்தவும் நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்