மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதனால் புதிய முறைமை தொடர்பாக தற்போதைய எல்லை நிர்ணய அறிக்கையை விவாதத்துக்கு எடுப்பதற்கு நேற்று பிரதமர் ரணில் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த அறிக்கையை நிறைவேற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகும். குறித்த பெரும்பான்மை கிடைக்காவிடின் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த நேரிடும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அறிக்கை மீதான விவாதத்துக்கான திகதியை அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இதன்போது தேர்தல் முறைமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்தவேண்டும் என சிறுபான்மை கட்சிகள் வலியுறுத்தின. என்றாலும் புதிய முறைமையின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும் என சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் வலியுறுத்தின. ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் புதிய முறைமையின் கீழ் இல்லாவிடின் பழைய முறைமையிலாவது உடன் தேர்தலை நடத்த வேண்டும் என கூறியுள்ளன.
இதன்போது நேற்று கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்பதனால் புதிய முறைமை தொடர்பாக தற்போதைய எல்லை நிர்ணய அறிக்கை விவாதத்திற்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த அறிக்கை நிறைவேற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியமாகும். குறித்த பெரும்பான்மை கிடைக்காவிடின் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த நேரிடும்.
அத்துடன் குறித்த அறிக்கை மீதான விவாதத்திற்கான திகதியை அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.