புதிய முறைமை தொடர்­பாக தற்­போ­தைய எல்லை நிர்­ணய அறிக்கை!

191 0

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்­பாக இணக்­க­ப்பாடு எட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தனால் புதிய முறைமை தொடர்­பாக தற்­போ­தைய எல்லை நிர்­ணய அறிக்கையை விவா­தத்­துக்கு எடுப்­ப­தற்கு நேற்று பிர­தமர் ரணில் தலை­மையில் நடை­பெற்ற கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­படி குறித்த அறிக்­கையை நிறை­வேற்ற மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். குறித்த பெரும்­பான்மை கிடைக்­கா­விடின் பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்த நேரிடும் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் அறிக்கை மீதான விவா­தத்­துக்­கான திக­தியை அறி­விக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபா­நா­ய­க­ரி­டம் கோரி­யுள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கட்சி தலை­வர்கள் கூட்டம் நேற்று பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது.

இதன்­போது தேர்தல் முறைமை தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­த­வேண்டும் என சிறு­பான்மை கட்­சிகள் வலி­யு­றுத்­தின. என்­றாலும் புதிய முறை­மையின் கீழ் தேர்தல் நடத்த வேண்டும் என சுதந்­திரக் கட்­சியும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் வலி­யு­றுத்­தின. ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட்டு எதிர்க்­கட்­சியும் புதிய முறை­மையின் கீழ் இல்­லா­விடின் பழைய முறை­மை­யி­லா­வது உடன் தேர்­தலை நடத்த வேண்டும் என கூறி­யுள்­ளன.

இதன்­போது நேற்று கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்­பாக இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தனால் புதிய முறைமை தொடர்­பாக தற்­போ­தைய எல்லை நிர்­ணய அறிக்கை விவா­தத்­திற்கு எடுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி குறித்த அறிக்கை நிறை­வேற்ற மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். குறித்த பெரும்­பான்மை கிடைக்­கா­விடின் பழைய முறை­மையின் கீழ் தேர்தலை நடத்த நேரிடும்.

அத்துடன் குறித்த அறிக்கை மீதான விவாதத்திற்கான திகதியை அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

Leave a comment