வயிற்றில் இரும்புக் கம்பிகள் குத்திய தொழிலாளி உயிரை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய டாக்டர்கள்!

264 0

மேற்கு வங்காளத்தில் தொழிலாளி வயிற்றில் குத்திய இரும்புக் கம்பிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவரது உயிரை டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர். 

மேற்கு வங்காளம் மாநிலத்தின் 24 பர்கானா மாவட்டத்தை சேர்ந்தவர் உதய் சர்க்கார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று பரூபுர் பகுதியில் சென்ற சர்க்கார் அவரது அறையில் தொங்கி கொண்டிருந்த வயரை தொட்டார். அப்போது மேற்கூரையில் இருந்து அவருடைய வயிற்றின் மீது மூன்று இரும்புக் கம்பிகள் குத்தின.
அதில் அலறி துடித்த சர்க்கார், அருகிலுள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்து இரும்பு கம்பிகளை பத்திரமாக அகற்றினர்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இரும்புக் கம்பிகள் வயிற்றில் குத்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில்
மருத்துவமனைக்கு சர்க்கார் அழைத்து வரப்பட்டார். அவருக்கு 5 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்ய முடிவானது.
சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையால் சர்க்கார் வயிற்றில் இருந்த இரும்புக் கம்பிகள் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சையின் போது நிறைய ரத்தம் சேதமானது. ஆனாலும் ரத்தத்தை இருப்பு வைத்திருந்ததால் நாங்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நடத்தி முடித்தோம். சர்க்கார் தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் என தெரிவித்தார்.

Leave a comment