கருணாநிதிக்கு உலக பத்திரிகைகள் புகழாரம்!

296 0

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு உலக பத்திரிகைகள் பலதும் செய்திகள் வெளியிட்டு புகழாரம் சூட்டியுள்ளன.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின், சிஐடி நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு உலகின் முன்னணி பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளில் செய்திக்ள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 5 முறை முதல்வரான அவர் 19 ஆண்டுகள் ஆட்சி செய்ததை பாராட்டியுள்ளனர்.
இதேபோல், பிரிட்டனை சேர்ந்த கார்டியன் டைம்ஸ், கல்ப் டைம்ஸ் மற்றும் பிபிசியில் கருணாநிதியின் மறைவு செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் டான் பத்திரிகையிலும் கருணாநிதி மறைவு குறித்து செய்தி வெளியாகியுள்ளது.

Leave a comment