நீராட சென்ற இளைஞர்கள் சடலமாக மீட்பு

203 0

திஸ்ஸமஹராம, கிரிந்த கடற் பகுதியில் நீராட சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோஸ்காட் கடற்படை முகாமிற்கு பின்னால் உள்ள கடற்கரைப்பகுதியில் வைத்து குறித்த இருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஊருபொக்க பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (04) குடும்பத்தினருடன் கடலில் நீராட சென்ற போதே குறித்த இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment