சென்னையில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை!

207 0

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று நள்ளிரவு சென்னையில் மழை பெய்தது.
பல்லாவரம், குரோம்பேட்டை, செம்பாக்கம் , கீழ்பாக்கம், அயனாவரம், புரசைவாக்கம், எழும்பூர், சென்டரல், மயிலாப்பூர,  எம்ஆர்சி நகர், அடையாறு, முகப்பேர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
இந்தநிலையில்  எழும்பூர், சென்டரல், புரசவைவாக்கம்,  கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மடிப்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம் போரூர், அம்பத்தூர்  பெரம்பூர், அண்ணாநகர், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில்  பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Leave a comment