எனது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாது-அனந்தி சசிதரன் (காணொளி)

686 0

வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி கிழக்கு, தெற்கிற்கும் கடமை நிமித்தமும், தனிப்பட்ட ரீதியிலும் சென்றுவரும் தன்மீது துப்பாக்கி பெற்றுக்கொண்டதாகக் குற்றம்சாட்டும் வடக்கு மாகாண சபை உறுப்பினரின் காழ்ப்புணர்வு கருத்தின் மூலம் தனது பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

அமைச்சர் அனந்தி துப்பாக்கி வைத்திருக்கிறார் என்னும் உறுப்பினர் அஸ்மினின் கருத்தை, அவையில் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் அவைத்தலைவரிடம் அனந்தி கேட்டுக்கொண்டார்.

வடக்கு மகாண சபையில் அண்மையில் இடம்பெற்ற டெனீஸ்வரனின் அமைச்சு பதவி தொடர்பான விசேட அமர்வின்போது, வடக்கு மகாண உறுப்பினர் அஸ்மின், அமைச்சர் அனந்தி சசிதரன் பாதுகாப்பு அமைச்சிடம் ஆயுதம்பெற்றுள்ளார் என தெரிவித்த கருத்து தொடர்பில் தன்னிலை விளக்கமளிக்கும்போதே, அனந்தி சசிதரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment