50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது!

335 0

பாம்புகளையும் சக உயிர்களாக மதித்ததில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டு. பல காலமாக இந்தியாவில் பாம்புகள் தெய்வமாக வணங்கப்பட்டு வந்திருக்கின்றன. அது மட்டுமின்றி மண்புழுவைப் போல பாம்புகளும் விவசாயிகளின் நண்பனாகவே பார்க்கப்பட்டன. வயல்களில் விளைச்சல் அதிகமாகும் போது அதைத் தின்று எலிகளும் பெருகும். அது போன்ற சமயங்களில் அவற்றின் எண்ணிக்கையைச் சமநிலையில் வைப்பதற்குப் பாம்புகள் மிகவும் உதவியாக இருந்தன. ஆனால் காலம் செல்லச் செல்ல பாம்புகளைப் பற்றி தவறான அபிப்பிராயம் மக்களிடையே தோன்றியது; ஆபத்தானதாக கருதத் தொடங்கினர், இன்று பாம்புகளின் நிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கிறது. மக்கள் பாம்பைக் கண்டால் பெரும்பாலும் அடிப்பதற்குத்தான் முயல்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே அதைப் பிடித்து வேறு சில பகுதிகளில் விடவும், அவற்றைக் காப்பாற்றவும் முயற்சிக்கிறார்கள்.

பாம்பு

பல காரணங்களால் பாம்புகள் அவை வசிக்கும் இருப்பிடங்களை விட்டு மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து விடுகின்றன. எனவே அவை மனிதர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இது போன்ற காரணங்களால் சில வகைப் பாம்புகள் அழியும் நிலையில் இருக்கின்றன. அதே நேரத்தில் பாம்புகளால் மனிதர்களின் பக்கமும் உயிர் இழப்புகளும் இல்லாமல் இல்லை. இந்தியா முழுவதும் பாம்பு கடிப்பதால் மட்டும் ஒரு வருடத்திற்கு 46,000 உயிரிழப்புகள் வரை நிகழ்கின்றன என்கிறது ஓர் அறிக்கை. அவை பெரும்பாலும் கிராமப்புறங்களில்தான் நிகழ்கின்றன. அவசரத்திற்குச் சரியான போக்குவரத்து வசதிகள் கிடைக்காதது, மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்துகள் இல்லாதது போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் அதிகமாக நிகழ்கின்றன.இது போன்று இரு தரப்பிலும் நிகழும் உயிரிழப்பைத் தடுக்க ஒரு கருவி ஒன்று உருவாக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னால் பயன்பாட்டிற்கும் வந்திருக்கிறது.

கர்நாடகாவைச் சேர்ந்த பிரசாதம் இண்டஸ்ட்ரீஸ் (Prasadam Industries) எனும் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது. கிராமங்களில் எப்பொழுதுமே ஒரு வழக்கம் உண்டு. வயல்களுக்குள்ளே நடக்கும் போது கையில் ஒரு குச்சியை கையில் வைத்துக்கொண்டு தரையில் தட்டிக் கொண்டே செல்வார்கள்.

Leave a comment