நாட்டில் என்ன நடக்கின்றது என ஆழமாக சிந்திக்க வேண்டும்-ஸ்ரீநேசன்

288 0

இந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒருவர் மீது ஒருவர் சேற்றினை வீசுகின்ற போது நாங்கள் என்ன செய்திருக்கின்றோம் என்பது தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தேர்தல் செலவுக்காக சீன கம்பனி கொடுக்கப்பட்ட நிதி தொடர்பிலும், இது குறித்து உண்மைகளை தெரிந்து கொள்வதற்கும் நாங்கள் அவாவாக இருக்கிறோம்.

இது தொடர்பான உண்மைகளை தெளிவாக தெரிந்து கொள்வதற்கு இடையூறாக குழப்பங்கள் எழுகின்ற போது நாங்கள் சந்தேகமாக பார்க்க வேண்டியுள்ளது.

Leave a comment