லண்டன் தமிழ் இருக்கை: தேவை ரூ.54 கோடி!

266 0

  லண்டன் பல்கலையில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான அனுமதியை, அப்பல்கலை அளித்துள்ளது. அப்பல்கலையில், ஏற்கனவே, தமிழ் மொழித்துறை இயங்கி வந்த நிலையில், போதுமான மாணவர்கள் சேராததால், 1995ல் மூடப்பட்டது. அங்கு, பல அரிய ஓலைச்சுவடிகளும், புத்தகங்களும், ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, இருக்கை அமைப்பதற்கான ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், அதற்காக, 54 கோடி ரூபாய் நிதி திரட்டும் பணியில், தமிழ் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அடுத்த மூன்றாண்டுகளுக்குள், தமிழ் இருக்கை அமையும் என, தமிழ் இருக்கைக்கான செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment