13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம்! தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு ஒருமணிநேரம் சந்தர்ப்பம்!

243 0

அரசியல் கைதியான தங்கவேல் சிவகுமார் 13 வருடங்களின் பின்னர் மனைவி பிள்ளைகள் தாயாருடன் உறவாடிய காட்சிகள் மீண்டும் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தங்கவேல் சிவகுமார் என்ற அரசியல் கைதி 13 வருடங்களின் பின்னர் தந்தையின் மரண சடங்கில் இன்று அவரது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.

கடந்த 18-07-2018 அன்று இயற்கையெய்திய முனியப்பன் தங்கவேல் என்ற சிவகுமாரின் தந்தையாரின் இறுதி கிரியைகளில் பங்கு கொள்வதற்கு அவருக்கு ஒருமணிநேரம் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

3 பிள்ளைகளின் தந்தையான இவர் 13 வருடங்களாக சந்தேக நபராக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

2006ம் ஆண்டு 8ம்மாதம் 10ம் திகதி கொழும்பு கரந்தெனியா பகுதியில் வாகனத்துடன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட இவர் பொறள்ள பகுதியில் அமைந்துள்ள நியூ மகசின் சிறைச்சாலையில் அரசியல் கைதியாக உள்ளதாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். நீண்ட காலமாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பலப்பிட்டி உயர்நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருவதாக அவரது மனைவி சுமதி தெரிவிக்கின்றார்.

 

 

 

Leave a comment