தற்போதைய அரசாங்கம் தேர்தல் அச்சத்தில்-டலஸ் அழகப்பெரும

252 0

தற்போதைய அரசாங்கம் தேர்தல் அச்சத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

பெபரல் அமைப்பின் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்காக நுட்பமான நடவடிக்கையாக தேர்தல் திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டதாக அவர் கூறுகின்றார்.

கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பெபரல் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a comment