மஹிந்தவின் நியூயோர்க் டைம்ஸ் விவகாரம் – பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

204 0

சீனா நிறுவனமொன்றிடமிருந்து, முன்னாள் ஜனாதிபதிக்குப் பணம் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில், விவாதம் இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினால், ஒத்துவைப்புவேளைப் பிரேரணை மூலம், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று முற்பகல் 10.30 மணிக்கு, விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனினும் இன்றைய அமர்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டிருப்பதால் அவர் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, தேர்தல் நடவடிக்கைகளுக்காக, சீனா நிறுவனமொன்றிடமிருந்து, 7 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை, செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment