யாழில் செல் வெடித்து ஒருவர் படுகாயம்!

318 0

mortar-shell-pakistanவெடிக்காத நிலையில் இருந்த செல் ஒன்றை உடைக்கமுற்பட்டவேளை, அந்தச் செல் வெடித்து யாழ்ப்பாணத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்.மணியம்தோட்டம் உதயபுரம் 3ஆம் குறுக்கு பகுதியைச் சேர்ந்த தாகிதப்பிள்ளை அன்ரன் பொஸ்கோ (வயது – 37) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.பழைய செல்களில் இருக்கும் மருந்துகள் மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த நபர் வெடிக்காத செல்களில் இருந்து மருந்தைப்பெற்று விற்பனை செய்துவந்தவராவார்.

அவ்வாறு செல் ஒன்றினை உடைக்க முற்பட்டவேளையிலேயே அந்தச் செல் வெடித்து படுகாயமடைந்தார்.இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.