மன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை!

229 0

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட ஒரு தொகுதி முழு மனித எலும்புக் கூடுகளை கொழும்பு பல்கலைக்கழக சட்ட மருத்துவ அதிகாரி அங்கு எடுத்துச் செல்வதற்காக மன்னார் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னார் நகர் நுழை வாயில் பகுதியில் கடந்த மார்ச் மாத பகுதியில் சதொச விற்பனை நிலைய கட்டுமானப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அகழ்வுகளில் எலும்புக் கூடுகளும், எலும்புகளும் மீட்கப்பட்டன.

இன்று இரண்டு எலும்புக்கூடுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. இது வரை எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் எச்சங்கள் 43 பெட்டிகளில் அடைக்கப்பட்டு மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Leave a comment