இன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது!

225 0

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் முன்னிலையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

இன்று காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைக்குழி அகழ்வில் விரிவுப்படுத்தப்பட்ட இடத்தில் மேலும் மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய கட்டுமானப் பணியின் போது மேற்கொள்ளப்பட்ட மண் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து இது சம்பந்தமாக சட்ட ரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இப் பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்டு அடையாளமிடப்பட்டிருந்த மனித எலும்புக் கூடுகள் மற்றும் மனித மண்டையோடுகளை அகற்றும் நோக்குடன் துப்பரவு செய்யும் பணி இடம் பெற்றுள்ளது.

இது வரைக்கும் 40 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வரை 27 எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளியேற்றப்பட்ட எலும்புக்கூடுகள் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பாதுகாப்பாக மன்னார் நீதிமன்றிலுள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment