றெஜீனாவுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் கவனவீர்ப்பு

248 0

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் மாணவி றெஜீனா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நீதிகோரியும், போதை பொருளை ஒழிக்க கோரியும் கிளிநொச்சி இரமநாதபுரம் பாடசாலையில் மாணவர்கள் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இன்று காலை பாடசாலையில் இடம்பெற்ற இந்த கவனவீர்ப்பு போராட்டத்தில் சிறுவர்கள் என்ன பாலியல் பொம்மைகளா?

பெற்றோரே பெரியோரே சிறுவர் எம்மை பாதுகாருங்கள், உன் போதைக்கு பேதை தேவையா?

இன்று றெஜீனா நாளை யார்?

விிழித்தெழுவோம் சிறுவர்களை காப்போம், பள்ளி பிஞ்சுகள் பாலியல் பசுக்கு தீணிகளா?

போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

Leave a comment