போலி பேஸ்புக் கணக்கை நடத்தியவரின் விளக்கமறியல் நீடிப்பு

295 0

court-rules-e1444231072605காவற்துறை மா அதிபர் பூஜித் ஜெயசுதந்திரவின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை நடத்தி மோசடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டவரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

நியுசிலாந்தைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் அவரை எதிர்வரும் 19ஆம் திகதி திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அத்துடன் குறித்த இளைஞரின் கையடக்க தொலைபேசி குறித்த அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் இரகசிய கவற்துறைக்கு அறிவித்துள்ளது.