நாமலுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை முன்வைக்க உத்தரவு

299 0

namalgoooநாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் முன்வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக அதன் பணிப்பாளர் தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.

லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஷ தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அவர் தொடர்ந்து புறக்கணித்துவந்தமையானது, ஆணைக்குழுவை அவமதிக்கும் செயல் என்று குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.