சிறு குழந்தைக்கு கூட பாதையில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது-மஹிந்த

193 0

சிறு குழந்தைக்கு கூட பாதையில் இறங்கி செல்ல முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரோஹேன்பிட ஶ்ரீ அகயாராம விகாரையில் இன்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஹுனுபிட்டிய, கங்காராம விகாராதிபதி கலபொட ஞானிச்சார தேரர், முன்னாள் பாதுகாப்பு செயலளார் கோட்டாபய ராஜபக்ஷ, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மற்றும் பேராசிரியர் கலோ பொன்சேக ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதையை சமூகம் போதைப்பொருட்களால் நிரம்பியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment