யானை முத்துக்கள் 13 உடன் மூவர் கைது

249 0

யானை முத்துக்கள் 13 பதிக்கப்பட்ட கைச்சங்கிலி ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் பேருவளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறிப்பிட்ட கைச்சங்கிலியை பொலிஸ் உத்தியேதகத்தர் ஒருவர் வாங்குவது போல் சென்று குறித்த நபர்களை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்திற்கு முன் இன்று (13) ஆஜர்படுத்தப்படுத்தப்படவுள்ளார்.

Leave a comment