யாழ்ப்பாணத்தில் அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்பு!

289 0

யாழ்ப்பாணம், மணியந்​தோட்டம் பிரதேசத்தில், பற்றைக்காட்டுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில், அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம்,​ பொலிஸ் விசேட அதிரடிப்படை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடத்தே, இந்த வெடிப்பொருட்கள் நேற்று (08) மாலை மீட்கப்பட்டுள்ளன.

அவ்விடத்தில், மீட்கப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் 744 கிராம் நிறை​கொண்டதாகும் என்றும் விசேட அதிரடிப்படையினர் அறிவித்தனர்.இதேவேளை, வெடிப்பொருட்களை வெடிக்கவைப்பதற்காக உதவும், சேவை நூல்கள், 3 டெட்டனேட்டர்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் உள்ளிட்ட யுத்த உபகரணங்கள், மேலதிக பரிசோதனைக்காக, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் பதில் கட்டளை அதிகாரி, பொலிஸ் பரிசோதகர் எம்.பீ.இலங்கசிங்ஹ தலைமையிலான அதிகாரிகளே, இந்த வெடிப்பொருட்களையும், யுத்த உபகரணங்களையும் மீட்டுள்ளனர்

Leave a comment