மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து – 17 பேர் உடல் சிதறி பலி

458 0

மெக்சிகோ நகரில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் மிகப் பெரிய பட்டாசுச் சந்தை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு பட்டாசு விற்பனை அதிகளவில் நடைபெற்று வந்ததால் பட்டாசுகளை வாங்க மக்கள் குவிவது வழ்க்கம்.
இந்நிலையில், மெக்சிகோ பட்டாசு சந்தையில் நேற்று காலை 9.15 மணியளவில், அங்கு திடீரென்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
இந்த வெடி விபத்தில் 17 பேர் உடல் சிதறி பலியாகிளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படை அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a comment