யாழ்ப்பாணத்தில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு

2890 0

தமிமீழ விடுதலைப்புலிகளின் யூலை 5 கரும்புலிகள் தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் அமைப்பினால், முதல் தாக்குதல் நடத்தப்பட்ட நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாகவும், வல்வெட்டித்துறையில், மாவீரர்களின் நினைவு இடத்திலும், சுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.

நெல்லியடி மத்திய கல்லூரியில் முகாமிட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது, கரும்புலி தாக்குதலை மேற்கொண்ட கப்டன் மில்லரின் நினைவாக, கரும்புலி தினம் யூலை 5 இல் பிரகடனப்படுத்தப்பட்டு, தமிமீழ விடுதலைப்புலிகளால் நிறைவுகூரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment