பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தாயார் கோரிக்கை

335 0

perarivalan_3009569gவேலூர் மத்திய சிறையில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து பேசினார்.

இதன்போது, காயமடைந்த பேரறிவாளனை தன்னோடு வைத்து கவனித்துக்கொள்ள பரோலில் விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை சக கைதி ராஜேஸ்கண்ணா என்பவர் இரும்பு கம்பியால் தாக்கினார்.

இதில் பேரறிவாளன் காயமடைந்தார். அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அவரது தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் கைதிகளின் அறை மாற்றுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று அதிகாலை இச்சம்பவம் நடந்ததாகவும் சிறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேலூர் மத்திய சிறைக்கு சென்று பேரறிவாளனை சந்தித்தனர்.

இதன்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.