மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் தொடர்புகொள்ளுமாறு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் அறிவித்துள்ளது!

4726 0

தம்மால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் தமது நாளிதழின் சிரேஷ்ட ஆசிரியர்களை தொடர்புகொள்ளுமாறு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் அறிவித்துள்ளது.

அந்த ஊடக நிறுவனத்தனால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.  தமது நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் இலங்கையில் இருக்கும் தமது செய்தியாளர்களை அச்சுறுத்த வேண்டாம் என நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் கோரியுள்ளது.

மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்றினால் ஊடக சந்திப்பொன்றில் தமது ஊடகவியலாளர்கள் வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Leave a comment